2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமலை வைத்தியசாலைக்கு மாற்றம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 30 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

தாக்குதலுக்குள்ளான கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் மேலதிக  சிகிச்சைக்காக  திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு நேற்று புதன்கிழமை மாலை  மாற்றப்பட்டுள்ளார்.

இவரது கண்களில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக  வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் திருகோணமலையில் நடைபெற்ற கல்விச் செயலமர்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டிருந்தார்.  

தாக்குதலுக்குள்ளான இவர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X