2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை, கிண்ணியா குட்டிக் கராச் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி கிண்ணியா குட்டிக் கராச் பகுதியில் முச்சக்கரவண்டியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்ததாகவும் இதில் இருவர் காயமடைந்த நிலையில் உடனடியாக கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X