2025 மே 08, வியாழக்கிழமை

மூதூரில் மர்ம மனிதன்; பொதுமக்கள் மத்தியில் குழப்பம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக அப்பகுதியில் நேற்று நள்ளிரவு குழப்பநிலைமை ஏற்பட்டது.

நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் மூதூர் அக்கரைச்சேனைப் பகுதியில் பெண்களோடு சேட்டைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும்  மர்ம மனிதர்களை அங்குள்ள இளைஞர்கள் துரத்திச்சென்றபோது, அந்த  மர்ம மனிதர்கள் ஹபீப் நகர் பகுதியிலுள்ள கரையோரப் பாதுகாப்புக்கு  பொறுப்பான கடற்படையினரின் காவலரண்களுக்குள் நுழைந்துள்ளனர்.

இதனால் குழப்பமடைந்த இளைஞர்கள் அக்காவலரணை  முற்றுகையிட்டதுடன், அக்காவலரண் மீது கற்களால் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவங்களினால் ஐந்து பேர் சிறுசிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X