2025 மே 08, வியாழக்கிழமை

கிறீஸ் மனிதன் அச்சத்தை போக்க திருகோணமலை மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம்

Super User   / 2011 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலையில் மாவட்டத்தில் மக்களை அச்சமூட்டும் கிறீஸ் மனிதன் பற்றிய அச்சத்தை போக்கும் முகமாக மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரஞ்சித்  சில்வா தலைமையில் விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள பிரதேச  செயலாளர்கள்இ கிராம சேவை அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்திலங்கார உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் தோன்றியுள்ள அச்ச நிலமை காரணமாக மக்கள் பீதி அடைந்துள்ளனர். மக்கள் தேவையில்லாது அச்சம் கொண்டுள்ளனர். இதனை போக்க வேண்டியது கிராமசேவை உத்தியோகத்தர்களின் கடமை என  அரசாங்க  அதிபர் அங்கு குறிப்பிட்டார்.

உண்யைமலி் கிறீஸ் மனிதன் என்று எவரும் இல்லை. புதியவர்களை  கண்டு இந்நிலை தோன்றி உள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த பீதி வெகுவாக பரவி உள்ளது.பொதுமக்ள் பாதுகாப்பு படைகளினதும், பொலிஸாரினதும் கடைமைகளை தமதாக்கி கொள்ளக்கூடாது. இது பற்றிய தகவல்கள் கிடைத்ததுதம் பொலிஸாருக்கு உடன் அறிவிக்க வேண்டும்.  கிராமங்களில் அசம்பாவிதற்கள் ஏற்படின் அது பற்றி கிராம சேவையாளர்கள்  பிரதேச செயலாளலர்களுக்கு அறிவிக்க வேண்டும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • thahir Wednesday, 17 August 2011 01:14 AM

    ஏன்னா பகிடியஆ

    Reply : 0       0

    sahabdeen, Wednesday, 17 August 2011 03:25 AM

    திருகோணமலை அரசாங்க அதிபர் பத்திரிகை படிப்பது இல்லை என நினைக்கிறேன்,ஏன்னா ஐ.ஜி.பி.சேர் சொல்லி இருக்கிறார் கிரிஸ் பூதம் 47பிடிபட்டதாக ஊர்ஜிதம் செய்துள்ளாரே,,,,,,,,,,,,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X