2025 மே 08, வியாழக்கிழமை

செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளையினால் உழவு இயந்திரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளையினால் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் 10 நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் பிரதேசத்திற்கு  3 உழவு இயந்திரங்களும் மூதூர் பிரதேசத்திற்கு  4 உழவு இயந்திரங்களும்  பதவிசிறிபுர பிரதேசத்திற்கு 3 உழவு இயந்திரங்களும் என  பகிர்ந்தளிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலகங்கள் மூலமாக  கிராம அபிவிருத்தி சங்கத்தினரிடம் இவ் உழவு இயந்திரங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளை நிறைவேற்று அதிகாரி என்.சந்திரகுமார் கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X