2025 மே 07, புதன்கிழமை

சிறுவர் பாதுகாப்பு சம்மந்தமான பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், சேருவில ஆகிய  பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறுவர் பாதுகாப்பு சம்மந்தமான பயிற்சிப்பட்டறைகள் கடந்த வாரங்களில் நடத்தப்பட்டன.

சிறுவர் பாதுகாப்பு நன்னடத்தை உத்தியோகத்தர்களின் உதவியுடன் இந்தப் பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டன.

சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, இளவயதுத் திருமணம், பாடசாலைகளிலிருந்து இடைவிலகல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் போன்ற பல பிரச்சினைகள் குறித்து சேருவில பிரதேச செயலகப் பிரிவின் மஹிந்தபுர கிராமத்தில் கிராம அலுவலக உத்தியோகத்தர்களும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் சமூகமட்ட நிறுவனங்களைச் சேர்ந்த  உத்தியோகத்தர்களும் கலந்துரையாடினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X