2025 மே 07, புதன்கிழமை

கிரிக்கெட் தொடரில் சம்பியனான கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு

Super User   / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட், எஸ்.எஸ்.குமார்)

அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் தொடரில் சம்பியனான கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு பாரிய வரவேற்பளிக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேசத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை வந்த மாணவர்களுக்கு கிண்ணியா பாலத்திலிருந்து மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

இதேவேளை கிரிக்கெட் போட்டியில் சம்பியனான கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த ஏனைய மாணவர்களும் இது போன்ற பல சாதனைகளை புரிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த தொடரில் சம்பியனான மாணவர்கள் இச்சாதனையுடன் மாத்திரம் நின்றுவிடாமல் தொடர்ந்து இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும் என தௌபீக் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Mohammad Aslam Tuesday, 20 September 2011 04:15 AM

    கிண்ணியாவிலிருந்து தேசிய அணியில் இடம் கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X