2025 மே 07, புதன்கிழமை

யானை தாக்கிய ஆணொருவரின் சடலம் மீட்பு

Super User   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம். பரீட்)
 
திருகோணமலை, திரியாய் பகுதியில் யானை தாக்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

திரியாய் – 05ஆம் வட்டாரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கதிரவேலு தியாகறாஐh என்பவரே (58) யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
.
குறித்த சடலத்தை குச்சவெளி நீதிமன்ற மரண விசாரணை அதிகாரி ஏ.எம்.அப்துல் நயீம் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறு பொலிஸாரிற்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது சடலம் திருமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக
விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X