2025 மே 07, புதன்கிழமை

திருமலையில் சிவில் பாதுகாப்பு குழு அமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

திருகோணமலை பட்டினமும் சூழுலும் பிரதேசசெயலக பிரிவுக்கு உட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் திருமதி.சசிதேவி ஜலதீபன் தலைமையில் இன்று வெள்ளிகிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் திருகோணமலை பொலிஸ் பிரிவின் அத்தியட்சகர், தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடு பூராகவும் பொலிஸ் மற்றும் பொது மக்கள் இடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தி சிவில் சமூகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக மேற்படி சிவில் பாதுகாப்பு குழுக்கள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டமாகவே இக்கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • bzukmar Friday, 30 September 2011 09:01 PM

    சிவில் பாதுகாப்பு குழுக்கள்,சிவிலியன்களை பாதுகாக்காத குழுக்களாக மாறக்கூடாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X