2025 மே 07, புதன்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியை சடலமாக மீட்பு

Super User   / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

திருகோணமலை உவர்மலை கண்ணகிபுரம் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆசிரியை ஓருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, இவரின் கணவரான ஆசிரியர் தன்னைத்தானே கூறிய ஆயுதத்தால் வெட்டிய நிலையில்   திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி ஆசிரியையின் உடல் அவரது வீட்டின் கூரையில் தூக்கிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

இன்று பகல் ஆசிரியை தான் கற்பிக்கும் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என நம்பப்படுகிறது. இதேவேளை ஆசிரியையின் கணவரான ஆசியர் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய பின் தன்னை தானே கத்தியால் வெட்டி காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை தலைமையக பொலிஸார் இதுத்தொடர்பான விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X