2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திருமலையில சுனாமி நினைவாக வாயில் அலங்கார வளைவு அமைப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன், ரமன்)

சுனாமி தாக்கத்தின் 7ஆம் வருட ஞாபகார்த்தமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் மக்கள் வங்கியியினால் பிரதான வாயியில் அலங்கார வளைவு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மக்கள் வங்கியின் திருகோணமலை பிராந்திய அலுவலகம் இதற்றாக  இரண்டு இலட்சம் ரூபாய்களை  ஒதுக்கீடு செய்துள்ளது.
வைத்தியசாலை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் ந.வசந்தகுமார், கிழக்கு மகாண சபை  உறுப்பினர் நமால் காமினி ஹேவவிதாரண, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி கௌ.ஞானகுணாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X