2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யானைகளின் தாக்குதலில் கடைகள், வீட்டுக் குடியிருப்புகள் சேதம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 08 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - அல்லை நகர், இக்பால் நகர் ஆகிய கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து  கடைகள் குடிசைகள், வீட்டுத் தோட்டங்கள் என்பவற்றுக்கு சேதங்களை விளைவித்துச் சென்றுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அல்லை நகர், சேருவில வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றினுள் புகுந்த யானைகள்  இரண்டு கடைகளின் கதவுகளை உடைத்து அங்கிருந்த வியாபாரப் பொருட்களை  வீசியெறிந்துள்ளன.

இதேவேளை, அருகிலுள்ள இக்பால் நகர் கிராமத்திற்குள் புகுந்த யானைகள் குடிசைகள், மற்றும் வீட்டுத்தோட்டங்களுக்கு சேதத்தை விளைவித்து சென்றுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X