2025 மே 10, சனிக்கிழமை

திருகோணமலையில் பயிற்சி நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலையில் இக்ராட் நிறுவனத்தால் 7.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பயிற்சி நிலையத்தை தொலைத்தொடர்பு சேவைகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

திருகோணமலையின் மூன்றாவது மைல் கல் பண்ணை வீதியில்  முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தின் வளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி நிலையத்தில் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் மாணவர்களுக்கும் தகவல் தொழிநுட்ப  பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் கிழக்கு  மாகாண  முதல் அமைச்சர் நஜீப் ஏ மஜீத், கிழக்கு மாகாண  ஆளுநர்  ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஆகியோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X