2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அரிமா கழக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 23 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார்


திருகோணமலை கிங்கோ அரிமா கழகத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

கிறீன் வீதி சண்சயின் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரிமாக் கழகத்தின் மாவட்ட ஆளுநர் தேசபந்து பா.ஜனரஞ்சன் பிரதம அதிதியாக பங்கேற்றார.;

புதிய அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 6 பேருக்கும் அங்கத்துவச் சின்னம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  2013 – 2014ஆம் வருடத்துக்கான புதிய தலைவராக கே.குலதீபன் பதவி ஏற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற கழகத்தின் செயற்பாட்டில்  அதிகப்படியாக பங்கேற்றவர்களுக்கு லயன் மாவட்ட ஆளுநர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.




You May Also Like

  Comments - 0

  • sivanathan Monday, 24 June 2013 01:29 PM

    படங்கள் ஏன் தெளிவில்லாமல் இருக்கின்றன..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .