2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 09 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                       

கடந்த வருடம் மொரவௌ பகுதியில் இரண்டு மாடுகளை திருடி அவற்றை அறுத்து இறைச்சியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவர்; தொடர்பில் வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தில்; நடைபெற்றுவந்த நிலையில், அவ்வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த அந்த  இரண்டு சந்தேக நபர்களையும் நேற்று புதன்கிழமை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, இம்மாதம் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாக இருந்த காலத்திலும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் சிறைவாசம் அனுபவித்துள்ளதாகவும் மொரவௌ பொலிஸார் தெரிவித்தனர்.                         


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .