2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கூரிய ஆயுதத்தினால் தாக்கியவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                       

கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவரை  கொலை செய்வதற்கு முயற்சித்ததுடன், காயம் ஏற்படுத்திய  ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) கைதுசெய்ததாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.  

இதனைத் தொடர்ந்து காயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்டிருந்த காணிச்  சண்டையில் பழி தீர்க்கும் வகையில் மறைந்திருந்து கூரிய கத்தியினால் சந்தேக நபர்  மேற்படி நபரை சனிக்கிழமை (22) இரவு குத்தியுள்ளார்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .