2025 மே 14, புதன்கிழமை

ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆள்சேர்ப்பு பரீட்சை

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், நூருல் ஹுதா உமர் 

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான இலங்கை ஆசிரியர் சேவை தரம் III-I தரத்துக்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆள்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் உளர்ச்சார்பு பாடத்தின் பரீட்சை, எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக உளர்ச்சார்பு பாடத்தின் மீள் பரீட்சை காலவரையரையன்றி பிற்போடப்பட்டிருந்தது.

தற்போது இப்பரீட்சையை நடத்துவதற்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சம்மந்தப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சை அனுமதி அட்டைகள், இம்மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறவில்லையாயின், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் 026-2220092 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்று மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X