அப்துல்சலாம் யாசீம் / 2018 நவம்பர் 18 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர் ஒருவர், சுகவீனமுற்ற நிலையில், கடல் மார்க்கமாக திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு வந்த போது, இடை வழியில் இன்று (10) அதிகாலை மரணமித்துள்ளாரென, திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த மீனவர், கல்பிட்டி, குறிஞ்சான்பிடிய, சென்மேரீஸ் வீதியைச் சேர்ந்த டபிள்யூ கே.பி. ஜூட் ரஞ்சித் பெர்ணான்டோ (52 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக, வாழைச்சேனையிலிருந்து, கடந்த 12ஆம் திகதி படகில் சென்ற இம்மீனவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago