2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இடைஞ்சல் ஏற்படுத்தியவருக்கு அபராதம்

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் கடமைகளை செய்ய விடாது இடைஞ்சல் ஏற்படுத்திய ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

திருட்டு வழக்கொன்றின் போது நீதிமன்றத்துக்கு வருகை தந்த சந்தேக நபர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதோடு சிறைசாலை உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாக நீதிபதியிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த நபருக்கு ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாதம் சிறைதண்டனை விதித்தும் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி கயான் மீஹககே உத்தரவிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .