2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இலத்திரனியல் உபகரணங்களை திருடியவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 மே 01 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                   

மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடியதாகக் கூறப்படும் 18 வயதுடைய ஒருவரை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.அப்துல் முகீட், சனிக்கிழமை (30) உத்தரவிட்டார்.                 

இந்தச் சந்தேக நபர் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து நான்கு மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை திருடி வைத்திருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (29) இரவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .