2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

இலவச குடிநீர் இணைப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 21 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

தோப்பூர் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சமூர்த்தி உதவி பெறும் 106 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பை புதன்கிழமை பெற்றுக் கொடுக்கப்பட்டன.

கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான அமைப்பும் (ரெக்டோ), தோப்பூர் பீப்பிள்ஸ் எய்ட் நிறுவனமும் இணைந்து இக்குடிநீர் இணைப்பை பெற்றுகொடுத்தன.

இந்நிகழ்வில் ரெக்டோ நிறுவனத்தின் செயலாளர் எம்.எஸ்.எம்.இர்பான் பீப்பிள்ஸ் எய்ட் நிறுவனத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.தாணீஸ் உள்ளிட்ட பலரும் கந்துகொண்டனர்.

இவ் இரண்டு அமைப்புக்களும் ஒன்றிணைந்து இதுவரை தோப்பூர் பிரதேசத்தில், சமூர்த்தி உதவிபெரும் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பை பெற்றுக் கொடுத்துள்ளதாக பீப்பிள்ஸ் எய்ட் நிறுவனத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.தாணீஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .