2024 மே 02, வியாழக்கிழமை

​​ஐஸ் போதைபொருளுடன் ஒருவர் கைது

Janu   / 2023 ஜூலை 30 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, துறைமுக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பிரதேசத்தில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவரை கைது செய்யததாக துறைமுகப்பொலிஸார்  தெரிவித்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில்  குறித்த  நபரை  சோதனைக்கு உற்படுத்திய  வேளையில் சந்தேகநபர்   மறைத்து வைத்திருந்த  210  மில்லிகிராம்  ஐஸ்  போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக  துறைமுகப்பொலிஸார்  தெரிவித்தனர்.

சந்தேகநபர் ஏறாவூர்-2,  அம்பாறை பிரதேசவாசி எனவும் சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட போதைபொருளையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார்   தெரிவித்தனர் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .