2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஓட்டோ விபத்தில் தந்தையும் மகனும் காயம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை - கண்டி வீதி, 4 ஆம் கட்டைப் பகுதியில், திருகோணமலையில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்ற ஓட்டோ ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்று (04) விபத்துக்குள்ளானது.

இதில் 2 சிறுவர்களோடு, தாயும் தகப்பனும் பயணித்ததாகவும் தகப்பனும் ஒரு பிள்ளையும் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள், மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்த சீனக்குடா பொலிஸார், விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X