2025 மே 03, சனிக்கிழமை

ஓட்டோ விபத்தில் தந்தையும் மகனும் காயம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை - கண்டி வீதி, 4 ஆம் கட்டைப் பகுதியில், திருகோணமலையில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்ற ஓட்டோ ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்று (04) விபத்துக்குள்ளானது.

இதில் 2 சிறுவர்களோடு, தாயும் தகப்பனும் பயணித்ததாகவும் தகப்பனும் ஒரு பிள்ளையும் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள், மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்த சீனக்குடா பொலிஸார், விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X