2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

குடும்ப சந்திப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்                

சிறைக்கைதிகள் தினத்தினைத் முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள  கைதிகளின் உறவினர்களுக்கும் கைதிகளுக்கும் இடையிலான  குடும்ப சந்திப்பு, திருகோணமலை சிறைச்சாலை வாளாகத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் யு.ஜி.டபிள்யூ.தென்னக்கோன் தலைமையில் வெள்ளிக்கிழமை(16) நடைபெற்றது.        

இதன்போது திருகோணமலை சிறையில் இருக்கின்ற கைதிகளோடு குடும்ப உறவினர்கள் சந்தித்து கலந்துரையாடினர். மேலும், கைதிகள் தங்களின் குழந்தைகளோடு சந்தோசமாக இருந்தார்கள்.

அத்தோடு, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கைதியொருவரின் மனைவிக்கும் உதவித்தொகையும் வழங்கிவைக்கப்பட்டதுடன்   பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

செப்டெம்பர் 12ஆம் திகதி  சிறைக்கைதிகள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

      


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .