2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்த இளைஞர்களுக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                     

ஜமாலியா பிரதேசத்தில் போதைப் பொருட்களை வைத்திருந்த மூன்று இளைஞர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார்.

திருகோணமலை, ஜமாலியாப் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மொஹமட் சதாம் (வயது 24), மொஹமட் காசிம் மொஹமட் சின்னன் வ(து 21), மொஹமட் அலி மொஹமட் கசீம் (வயது 24) ஆகியோருக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜமாலியாப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (17)இரவு, குறித்த மூன்று இளைஞர்களும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களை தமது  உடைமையில் வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .