2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை கோமரங்கடவெல  பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பம்புறுகஸ்வெவ பகுதியில் 7கிரேம் கேரளா கஞ்சா வைத்திருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை நேற்று (14)மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கோமரங்கடவெல பிரதேசத்திலுள்ளவர்களுக்கு கேரளா கஞ்சாவினை  விற்று வருகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சோதனையை மேற்கொண்ட பொலிஸார் அவரை கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவெல - பபுறுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த எம்.துஸார  பியவர்தன (வயது 37) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .