2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு பிணை

Niroshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

நூறு கிராம்  கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்  பேரில் கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதவான் சரவணராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ததோடு எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் கிண்ணியா, பூவரசந்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான குறித்த நபரை கிண்ணியா கடற்கரை பிரதேசத்தில்  நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .