2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நஹீம் முஹம்மட் புஹாரி

மூதூர் பிரதேசத்தில் 2 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்காக, கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை (05) கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்புடைய  மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .