2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Niroshini   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

மூதூர்,பாலநகர் பிரதேசத்தில் கஞ்சா கொண்டு சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர்,பாலநகர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.கபீல் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை இன்று புதன்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .