2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

Editorial   / 2017 நவம்பர் 08 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா, குறிஞ்சாக் கேணி பகுதியில் கேரளக் கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று முன்தினம் (06) திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால்   கைதுசெய்யப்பட்டுள்ளார்.

55 வயது குடும்பஸ்தரான இவரிடமிருந்து 5 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதென பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரையும் கேரளா கஞ்சாவையும் மேலதிக விசாரணைக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.விஜேசிங்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X