2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

கல்முனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளையால் கல்முனை றோயல் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு, பாடசாலை மண்டபத்தில் அண்மையில் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளையின் தலைவர் ஏ.அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதமஅதிதியாக் கலந்துகொண்ட கல்முனை மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.முகம்மட் நவாஸ், ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ் ஆகியோர் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனியிடம் புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்களை கையளித்தனர்.

இந்நிகழ்வில், கல்முனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் உப தலைவர் கவிஞர் சோலைக்கிளி, செயலாளர் எஸ்.எல்ஏ.அஸீஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X