2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலைவளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிககல்விபீடத்தின் 1ஆம் வருட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள், எதிர்வரும் 20ஆம் திகதியும் 3ஆம் வருட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள், எதிர்வரும் 21 ஆம் திகதியும் ஆரம்பிக்கபடவுள்ளன என, வளாக முதல்வர் கலாநிதி வ. கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை வளாகத்தின் இப்பீடத்தின் கல்வி ஆண்டுக்கான மாணவர்களின் சகல கல்வி நடவடிக்கைகளும், கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், 4 ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதியும் 2 ஆம் வருட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள், ஆகஸ்ட் 14ஆம் திகதியும் மீள ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .