Editorial / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிழக்கு மாகாணத்தில் அடுத்த வருடத்தில் (2019), 17 பாடசாலைகள் தரமுயர்த்தப்படுமென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், நேற்று மாலை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாம் ஆளுநராக பதவியேற்ற போது,கல்வி மட்டத்தில் கிழக்கு மாகாணம் 9 ம் இடத்தில் காணப்பட்டதாகவும், தற்போது கல்வி ரீதியான அபிவிருத்தியை இலக்காக கொண்டு பல்வேறு வகையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
க.பொ.த.சாதாரண தர பெறுபேறுகளின் பிரகாரம், இம்முறை 6ம் இடத்தை கிழக்கு மாகாணம் பெற்றுக்கொள்ள கூடும் என்பது தமது எதிர்பார்ப்பாக அமைவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.
கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களை போதிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுவதாகவும், 2000ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கப்பெறுமாயின் வெகு விரைவில் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago