Princiya Dixci / 2021 ஜூன் 11 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
உரங்களை உற்பத்தி செய்வதற்கான விரைவான திட்டத்தைத் தயாரிக்குமாறு, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவுறுத்தினார்.
ஏற்கெனவே உரங்களை உற்பத்தி செய்து வரும் உள்ளூராட்சி மன்றங்களிடம் இந்தச் செயல்முறையை மேம்படுத்தத் தேவையான திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், குப்பை சேகரிப்பு குறைவாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் உரங்களை உற்பத்தி செய்ய மாற்று முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், மாகாண விவசாய சேவைகள் பணிப்பாளர், மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு விவசாய சமுதாயத்துக்கும் தங்களுக்குத் தேவையான உரங்களை உற்பத்தி செய்வதற்கான சிறப்புத் திட்டங்களைத் தயாரிக்குமாறு பணிக்கப்பட்டனர்.
3 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
9 hours ago