2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கேரள கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் கைது

ஏ.எம்.ஏ.பரீத்   / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா  பொலிஸ் பிரிவு, சூரங்கல் பகுதியில் கேரள கஞ்சா  வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இன்று  (05) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சூரங்கல், சலாமத் நகரைச் சேர்ந்த  27 வயது குடும்பஸ்தரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோவும், 620  கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேகநபர், கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .