2025 மே 05, திங்கட்கிழமை

கேரளா கஞ்சாவை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பகுதியில் 200 மில்லி கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று (22) உத்தரவிட்டார்.

சந்தேகநபர, இறால்குழி, மூதூர் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரெனவும், இவரை, கைதுசெய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக, போதைப் பொருள் தொடர்பான பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X