Princiya Dixci / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம் கீத்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலை கைதிகள் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக திருகோணமலை பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக சிறைக்கைதிகள் ஐவருக்கு, கடந்த வெள்ளிக்கிழமை (02) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் மேற்படி அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில், கடந்த மூன்று தினங்களில் திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 21 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர் என திருகோணமலை பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, கோதுமை ஆலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என அன்டிஜன் பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025