Kogilavani / 2015 நவம்பர் 06 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
இலவசமாக முன்னெடுக்கப்பட்ட தையல் பயிற்சியை நிறைவு செய்த யுவதிகளுக்கு சான்றிதழ்களும் தையல் இயந்திரங்களும் கிண்ணியாவில் வைத்து நேற்று(5) வழங்கப்பட்டன.
இதன்போது 60 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் டாக்டர் ஹில்மி மஹ்ரூப் சான்றிதழ்களையும் தையல் இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.
கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சின் அனுசரணையுடன் வலது குறைந்தோர் மற்றும் ஏழை யுவதிகளுக்கு திருகோணமலை மாவட்டத்தில் 12 நிலையங்களில் இந்தப் பயிற்சி நெறி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago