2026 மார்ச் 25, புதன்கிழமை

சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கொட்டியாவப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை சடலமொன்று மீட்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

திரியாய் -05ஆம் வட்டாரம், சோலையடியைச் சேர்ந்த 06 பிள்ளைகளின் தந்தையான செல்லத்தம்பி சண்முகராசா (வயது 57)  என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த 16ஆம் திகதி கட்டுக்குளம் பகுதியிலுள்ள வயலுக்கு காவலுக்குச் சென்ற மேற்படி நபர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் பொலிஸில் குறித்த வயல் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், காணாமல் போன இந்த நபரை தேடியபோது வயலுக்கு அருகிலுள்ள ஆற்றில் இவர் சடலமாகக் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .