2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிசுவை கொன்று கொளுத்திய தாய்க்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2021 ஜூலை 15 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் பிறந்தவுடனேயே சிசுவொன்றைக் கொலை செய்து எரித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அச்சிசுவின் தாயை, இம்மாதம்   28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் விசானி தேனவது, நேற்று முன்தினம் (13) மாலை உத்தரவிட்டுள்ளார்.

மத்ரஸாநகர் பேராறு கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இப்பெண்ணின் கணவர், 4 வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், பிறிதொரு நபர் மூலம்  ஏற்பட்ட தகாத உறவில் கிடைத்த சிசுவையே, இவர் கொலை செய்துள்ளார் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .