2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சீமெந்து ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து

Princiya Dixci   / 2021 ஜூன் 28 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

கந்தளாய் 92ஆம் கட்டைப் சந்தியில் இன்று (28) அதிகாலை 05 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் 52 வயதுடைய ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலையிலிருந்து குருநாகலுக்குச் சென்ற லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கு பிரதான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதென, பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X