2026 மார்ச் 19, வியாழக்கிழமை

சூதாடிய நால்வர் கைது

தீஷான் அஹமட்   / 2018 ஜனவரி 08 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர, நீணாக்கேணி காட்டுப் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நால்வர், நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக சிலர் பணத்துக்கு சூதாடி வருவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சூது விளையாடிய இடத்திலிருந்து ஒரு தொகை பணம், பாய், சூது விளையாடப் பயன்படுத்தப்படும் தாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, சேருநுவர  பொலிஸர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .