2025 ஜூன் 09, திங்கட்கிழமை

திராட்சைகளை உட்கொள்ள வேண்டாம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

தற்போது சந்தையில் மலிவு விலையில் விற்கப்படும் திராட்சைப் பழங்களை வாங்கி உட்கொள்ள வேண்டாமென கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிண்ணியாவில் சனிக்கிழமை (31) வாராந்தச் சந்தையில் ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 100 ரூபாய் படி விற்கப்பட்ட திராட்சைப்பழத்தை வாங்கி உட்கொண்ட  சில மணி நேரங்களில் வாந்தியும் தலைச்சுற்றும் ஏற்பட்டு மயக்கமான நிலையில் 13 கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 07 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

03 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரே  திடீர் சுகவீனமுற்றனர். இந்நிலையிலேயே, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .