Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து சுமூகமான முறையில் மீன்பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஐ.தே.க.வின் திருகோணமல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவச் சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு, கிண்ணியா மீன்பிடி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'சட்டத்துக்கு முரணாக மீன்பிடி வலைகள்; மற்றும் உபகரணங்களான டிஸ்கோ வலை, டைனமட், அதிகூடிய மின்னொலி போன்றவற்றை பயன்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட வலைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடித் தொழிலில் ஈடுபடமுடியும்,
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மீனவர்கள் எமது நாட்டு மீன்களை சூறையாடி வந்தனர். அந்தக் காலத்தில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக கடற்றொழிலை தடுக்க முடியவில்லை.
இங்குள்ள மீனவர்களின் நலன் கருதி எனது 5 வருட காலத்தில் மூன்று வருட திட்டமொன்றை கொண்டு வரவுள்ளேன். இதனுடாக மீனவர்களின் எதிர்கால மேம்படுத்தலுக்கான மீனவர் நலத் திட்டங்களை மேற்கொள்வேன்.
இங்கு வந்துள்ள மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் மீனவர்களின் குடும்ப நிலைப்பாட்டை நன்கு அறிந்தவர்கள். இவர்களின் உதவியுடனும் கடற்றொழில் அமைச்சரின் அனுமதியுடனும் இம்மாவட்ட மீனவர்களின்; தொழிலை மேம்படுத்துவதற்கான சகல வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ளவுள்ளேன்'; என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
32 minute ago
2 hours ago