2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

திருமலையில் தேசிய உணவு உற்பத்தி வாரம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

தேசிய உணவு உற்பத்தி வார நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை கிண்ணியா பனிச்சம் குளம் கிராமத்தில் நடைபெற்றன.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.புஸ்ப குமார, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி,  மாகாண சபை உறுப்பினர் டொக்டர் அருண சிறிசேன ,  மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹூசைன், திருகோணமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பரமேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மரக் கன்றுகள், விதைகள் என்பன விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

அத்துடன்,நெற் செய்கை தவிர்ந்த ஏனைய உணவு உற்பத்தி தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .