Princiya Dixci / 2021 ஜனவரி 26 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அ.அச்சுதன்
தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவான் அத்துக்கோரல தலைமையில், பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (26) நடைபெற்றது.
பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்காலத்தில் நடைமுறைத்தப்பட வேண்டிய திட்டங்கள் என பல்வேறு விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி, உதவி பிரதேச செயலாளர் ஆர்.பிரசாந்தன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், தம்பலகாமம் பிரதேச சபையின் பதில் தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரி, திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
13 minute ago
29 minute ago
44 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
44 minute ago
50 minute ago