2026 மார்ச் 25, புதன்கிழமை

தரச்சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 24 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

திருகோணமலை, மூதூர் பிரதேசத்திலுள்ள  வெதுப்பகங்கள் மற்றும் ஹோட்டல்களில் சுகாதாரத்தை பேணிவந்த உரிமையாளர்கள் 19 பேருக்கு தரச்சான்றிதழ்கள் மூதூர் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (23) வழங்கப்பட்டன.

மூதூர் பிரதேசத்திலுள்ள வெதுப்பகங்கள், ஹோட்டல்களை மூதூர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் மூதூர் பிரதேச சபையின் வருமான வரி உத்தியோகஸ்தர்களும் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது,  சிறந்த சுகாதாரத்தைப் பேணிய   வெதுப்பகத்துக்கு ஏ தரச் சான்றிதழும் வெதுப்பகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு 11 பி தரச் சான்றிதழ்களும் 07 சி தரச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாக மூதூர் பிரதேச சபையின் ஊழியர் பீ.டீ.அஜ்மல் தெரிவித்தார்.
      

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .