2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை

Editorial   / 2017 நவம்பர் 11 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், திருகோணமலை கிளையால் திருகோணமலை செயிண்ட்ஜோசப் கல்லூரியில், நேற்று (10) அவசரகால டெங்கு கட்டுப்பாட்டு நடைமுறைபடுத்தப்பட்டது.

செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் கல்லூரிக்கு விஜயம் செய்து, டெங்கு பற்றி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களை பாடசாலையில் நுளம்பு இனப்பெருக்கம் செய்வதற்கான தண்ணீர் தங்கி நிற்கின்ற இடங்களை அவதானித்து தூய்மையாக்கும்திட்டத்தை செயல் படுத்துவதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள்.

பாடசாலை துப்பரவுப் பணியை முடித்தபின், அவர்கள் தங்களது செயல் பற்றிய விளக்கத்தை, கல்லூரி அதிபருக்கும், இலங்கை  செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை கிளை தலைவர் டொக்டர் ஈ. ஜீ.ஞானகுணாளன், கிளைநிறைவேற்று அதிகாரி டொக்டர் என். ரவிச்சந்திரன், கல்லூரி ஆசிரியர்களுக்கும், என்ன தீர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது என விளக்கினார்கள்.

டெங்கு நோய், அறிகுறிகள், டெங்கு நோய் வராமல் எப்படி பாதுகாப்பாக இருத்தல் அவற்றின் பாதிப்பை எவ்வாறு தடுப்பது பற்றி செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளன் தெளிவுபடுத்தினார்.

இது ஒரு தொடர்ச்சியானவேலைத்திட்டமாக இருக்கும் என்பதால், டெங்கு ஒருங்கிணைப்பாளர் த. கஜரூபன், செஞ்சிலுவை சங்கத்தின்  எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்தினார்.     மேலும் தீவிரமாகபங்கேற்கும்படி கேட்டுக்கொண்டார். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பல்வேறுகுப்பை, கழிவுப்பொருட்களை சேகரித்தல் மற்றும் பல்வேறுகழிவுகளை எவ்வாறுபிரிக்கலாம் என விளக்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X