2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் விபத்து

Nirosh   / 2021 நவம்பர் 18 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி சந்தியில் நேற்று (17) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டோவுடன் சிறிய ரக உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், விபத்தில் காயமடைந்த இருவரையும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான 2 வாகனங்களும் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X