Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு தாதிமார்கள் 25 பேரை நியமிப்பதற்கு, சுகாதாரப் பிரதியமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரதியமைச்சர் அண்மையில் அந்த வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டபோது, அங்கு காணப்படுகின்ற குறைபாடுகள் பற்றி, அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனுஷ்யா ராஜ்மோகனிடம் கேட்டறிந்துகொண்டார். அந்தக் குறைபாடுகளில் தாதிமார்களின் தட்டுப்பாடு முக்கியமானதாகக் காணப்பட்டது.
தினமும் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் செல்வதாலும் தங்கி இருந்து சிகிச்சை பெறுவதாலும் தாதிமார்கள் அதிகம் தேவைப்படுகின்றனர் என்றும் தற்போது இருக்கின்ற குறைந்த எண்ணிக்கையிலான தாதிமார்களைக் கொண்டு சேவையை வழங்குவது சிரமாக இருக்கின்றது என்றும் பணிப்பாளர், பிரதியமைச்சரிடம் தெரிவித்தார்.
இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதாக அப்போது உறுதியளித்த பிரதியமைச்சர் அதற்கான நடவடிக்கையை இப்போது எடுத்துள்ளார். அதன்படி, புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையின்போது 25 தாதிமார்களை, திருமலை பொது வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு, பைசல் காசிம் சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
3 hours ago
3 hours ago